இசை தரும் இனிய பாடல்கள் - 1


 1. காலையிலே ஆரம்பித்தேன் கந்த புராணம்( இசைப்பாடல்)


ஒவ்வொரு மனிதருள்ளும் ரத்தத்தில் நாடி நரம்புகளில் ஊறிக் கிடப்பது கடவுள் நம்பிக்கை! அறிவு வளர்வதற்கு முன்பே உணர்வில்  ஊடுருவி விடுவது கடவுள் நம்பிக்கை! திக்கற்ற காட்டில் சிக்கியதுபோல்  யாரும் இல்லாக் கடலில் விழுந்ததுபோல் அல்லலுறும் நேரத்தில் ஆதரவாய் தெரிவது ஆண்டவன் மட்டும்தான்! கற்பனையே? உண்மையோ? ஆனால் யார் கைவிட்டாலும் கவலையுறும் நேரத்தில் நம்முடனே இருந்து நமக்கு கைகொடுத்து தூக்கி விடுவது கடவுள் மட்டும் தான்! அறிவு நம்ப மறுத்தாலும், உணர்வு கைபிடித்து அழைத்துச் சென்று மனதிற்குள் உட்கார வைத்து ஆராதனை செய்து விடுகிறது!  என்னுடைய 5 வயது பிஞ்சு மனதில் ஆணி அடித்து அமர்ந்து கொண்டவர் முருகப்பெருமான்!








Comments

  1. மிக அருமை 👌 முருகன் பாடல் கேட்க கேட்க மனம் முழுவதும் ஆனந்தம் வழிந்தோடுகிறது! பக்தியில் மனம் முழுவதும் பரவசமாகிறது! மிக்க நன்றி! வாழ்க வளமுடன்! இனிதான நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்