Posts

9. காலடியில்...

Image
9. காலடியில்... நான் நடந்து  செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும்  எறும்புகள், புழுக்கள்,  சிறு சிறு நத்தைகள்  மற்றும்  கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான  உயிரினங்கள்  எனக்குத் தெரியாமலேயே  மரித்துக் கொண்டிருக்கின்றன!  நடந்துதான் ஆகவேண்டும்!  நடக்கும் போது  அதுவும் நடக்கின்றன! நடக்கும்போது  அதுவும் நடக்கும்  என்று தெரியும்! இருப்பினும்  தவிர்க்க வழியில்லை!  நான் எப்படி  அகிம்சை வாதியாக  ஆக முடியும்? முழுவதும் கேட்க 👇👇கீழே  சொடுக்குக: 👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 8

Image
  8. திருமண வாழ்த்து நறுமண மேடையில்  இருமனம் இணைய  திருமணம் காண்போரே! அன்பும் அறிவும் அழகும்  ஒன்றாய் கொண்டோரே!  வாழ வேண்டும் நீங்கள்!  வாழ்த்துகின்றோம் நாங்கள்! வாழ வேண்டும் நீங்கள்!  வாழ்த்துகின்றோம் நாங்கள்! இனிய காலை வணக்கம்! இசைப் பாடலுக்கு  இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் 7

Image
7. தம்பி தம்பி தம்பி  தளராதே தம்பி ! தண்டச்சோறு என்பார்! தடிமாடு என்பார்! சண்டக்கோழி என்பார்! தரித்திரம் என்பார்! தூக்கி போடு எல்லாம்! துணிந்து நில்லு முன்னால்! எல்லாம் வரும் தன்னால்! ஏற்றம் தரும் பொன்னாள!  (தம்பி தம்பி தம்பி...) இசை பாடலுக்கு  இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 6

Image
 6. வண்ண வண்ண பூக்களே...! உங்கள் கையில் நாளை உலகம்!    நீங்கள்தான் நாட்டின் திலகம்! தொலைதூர வானந்தான் தொட்டுவிடும் தூரந்தான்! அலைமீது ஆடுந்தான்               கரையேற்றும் ஓடந்தான்! தோல்வி கண்டு துவளாதே! வெற்றிகொள்ள தவறாதே! (வண்ண வண்ண...) இனிய காலை வணக்கம்! இசைப்பாடலுக்கு இங்கே சொடுக்குங்கள்:  👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 5

Image
5. சின்னக் கண்மணி...!         என் செல்லக்கண்மணி  உன் சிரிப்பு ஒளிவிடும் மத்தாப்பு! உன் முத்தம் தீராத தித்திப்பு! உன் அழுகை உள்ளத்தில் படபடப்பு! உன் மொழியே சந்தோச அறிவிப்பு! நீ வாழி நீடூழி வாழி! நீ வாழி நீடூழி வாழி! சின்னக் கண்மணி...! என் செல்லக்கண்மணி! சின்னக் கண்மணி...! என் செல்லக்கண்மணி நீ வந்தாய் ஒளி தந்தாய் உன் அப்பன் நானென்ற பேர் தந்தாய்  நீ பிறந்த நன்னாளுக்கு  அப்பாவின் அன்பான நல்வாழ்த்துக்கள்! நீ வாழி நீடுழி வாழி! நீ வாழி நீடூழி வாழி! (சின்னக் கண்மணி...!) இனிய காலை வணக்கம்! இசை பாடலுக்கு இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 4

Image
  4. இதமான பாதை  சுகமான பயணம்் பாலைவனங்களோ?  வாழும் வாழ்க்கையோ?  நாளை இல்லையோ?  நம்பிக்கை தொல்லையோ?  நல்ல வீணையோ?  புழுதியில் எறிவதோ?  சொல்லு வழியினை!  சொல்லு வழியினை இறைவா! நாளும் வாடினேன்,  நானும் பாடினேன், நாளும் வாடினேன்,  நானும் பாடினேன், இறைவா........! இறைவா........! இனிய காலை வணக்கம்! இசைப் பாடலுக்கு இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 3

3. பூவில் நுழைந்து  தேனில் கலந்து...  பூவில் நுழைந்து தேனில் கலந்து  மணத்தை சுமந்து வானில் மிதந்து  காற்றில் நுழைந்து ஊற்றில் கலந்து  மருந்தைச் சுமந்து மனதைக் கவர்ந்து  வசந்த கால தென்றல் காற்று  வாரிச் செல்லும் இன்னிசைப்பாட்டு  காதில் கேட்கக் கரும்புச்சாறு  காலமெல்லாம் கவி பாடு! இனிய காலை வணக்கம்!