6. பாட்டி எங்கள் குலதெய்வம்
6. பாட்டி எங்கள் குலதெய்வம் அதிகாலையில் எனது மூத்த மகன் அரசு தேர்வு எழுத மதுரை புறப்பட்டு சென்றான். வாழ்த்தி அனுப்பினோம். அரசு தேர்வில் வெற்றி பெற கடவுள் அருள் என்ற கொடுப்பினை வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கடினமாக தீவிரமாக பாடுபடுகிறவர்களுக்கு அந்த கொடுப்பினைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பார்கள். இயன்றளவு படித்து உள்ளான். இருப்பினும் உறுதியாக எதனையும் சொல்ல முடியாதல்லவா? முயற்சி செய்வது மட்டும் தான் நமது கையில் இருக்கிறது. அதற்கான பலன் என்பது இறைவன் கையில்தான் உள்ளது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை அப்பாவிற்கு முதலாம் ஆண்டு நினைவு நாள். அதற்கான முன்னேற்பாடுகள் இன்று செய்யப்பட்டன. என்னையும் எனது அண்ணன் தங்கையையும் படிக்கவைத்து அரசு வேலை பெறுவதற்கு வழிவகை செய்த எனது அப்பாவை நினைத்துப் பார்க்கின்றபோது எங்களுடைய பாட்டன் பாட்டியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. பாட்டனை விட பாட்டியை நினைத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவர்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் பாட்டனை எங்கள் அப்பாவே பார்த்தது கிட...

Comments
Post a Comment